Tuesday, May 25, 2010

பெரியோர் சிறியோர்!

"யாதும் ஊரே !யாவரும் கேளிர் ! " இவை கணியன் பூங்குன்றனார்ப் பாடிய உலகப் புகழ்ப் பெற்ற வரிகள். தமிழ் கற்றோர் அனைவரும் அறிந்திருக்ககுடிய வரிகள். ஆனால் இவ்வரிகளக்கு பின்னால் வரும் ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகளை Airtel Super Singer Junior -2விலும், மானாட மயிலாடவிலும், திருமதி செல்வத்திலும், இராணி ஆறு இராஜ யாருவிலும் மூழ்கித் திளைக்கும் சாமாண்ய தமிழன் அறிந்திருக்க நியாயமில்லை. இந்த சாமாண்ய தமிழனில் மெத்த படித்தவர்கள், அரசியல் தலைவன், தொண்டன், மாவட்டச் செயளாளர், அரசு அதிகாரிகள், கூலித்தொழிலாளி,விவசாயி, மாலுமி, கணிப்பொறிக்காரன், வணிகன் என அனைவரும் அடங்குவர். கூப்பிடும் துரத்தில் இன சுத்திகரிப்பு நிகழ்ந்துகொண்டிருக்க தாய்தமிழக குடிமகன் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இலவச வண்ணத் தொலைகாட்சி பெட்டியை வசப்படுத்துவதிலும், கண்டு களிப்பதிலும் செலவிட்டான். தமிழன் தன் உரிமைகள் மறுக்கப்பட்டு, காலம் காலமாக வேறூன்றி நின்ற மண்ணைவிட்டு விரட்டப்பட்டு, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் புகலிடம் கோரி நிற்பான் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் ஆறிந்ததனால் "எல்லா நாடுகளையும் சொந்த நாடாக கருது, அனைவரையும் உறவினராக எண்ணு" என்று பாடியதாக எண்ண தோன்றுகிறது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நவ யுவன்களுக்கும் யுவதிகளுக்கும் "தமிழர்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் ஏன் இலங்கைக்கு சென்றார்கள்?" என்று கேட்கும் அளவிற்கே பொது அறிவும் தமிழர் பிரச்சனைப் பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பவர்களே இவ்வாரிருக்க, பிறமாநிலத்தவரும், பிறமொழி பேசுபவர்களும், சர்வதேச சமுதாயமும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்ற நினைபதில் எள்ளவும் நியாயமில்லை.

இனி இப்பாடலை பார்ப்போம்,

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-கணியன் பூங்குன்றன்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நம் நாடே.உலகில் உள்ள அனைவரும் நமக்கு உறவினரே. நமக்கு தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. துன்பத்தற்கான காரணமும் தீர்வும் நமுள்ளேயே இருக்கிறது. இறத்தல் என்பது இயற்கை, அதில் புதுமை ஏதும் இல்லை. வாழ்வது இனிமையானது என மகிழ்வதும் இல்லை. இடிமின்னலோடு வானத்திலிருந்து விழுகின்ற மழைதுளி ஒன்றுடனொன்று இனைந்து சிற்றோடையாகி, பின்பு ஓடைகள் இனைந்து பாறைகளில் மோதிப் பேரிறைசலுடன் ஓடுகின்ற ஆற்றில் உள்ள ஓடம் நீரோட்டத்தின் வழியாக செல்வது போல் நம் உயிர் ஊழ்வினை வழியாக செல்லும் என்பதை ஞானத்தில்க் கண்டோம். ஆதலால் பெரியோரை வியந்து புகழ்வதும் இல்லை,சிறியோரை இகழ்தலும் இல்லை.

No comments:

Post a Comment