Tuesday, May 18, 2010
யாயும் ஞாயும் யாரா கியரோ -செம்புலப் பெயனீரார்.
கிழ்கண்ட பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையை சேர்ந்தது.
ஆசிரியர் செம்புலப் பெயனீரார்.
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் காதல் கொள்கின்றனர். அப்பொழுது தலைவன் தலைவியை நோக்கி பாடுகிறான்,
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.
"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment