Thursday, January 27, 2011
Thursday, June 10, 2010
நறியவும் உளவோ நீயறியும் பூவே!!!
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.
பூக்களில் உள்ள தேனை உண்டு வாழும் அழகிய சிறகுகளை உடைய வண்டே!! பழகுவதற்கு இனிமையும், மயிலை போன்ற அழகும், செறிவான அழகிய பற்களும் உடைய என் காதலியின் கூந்தலை விடவும் மணமுள்ள பூ ஏதேனும் நீ அறிவாயா!! என் மீது உள்ள அன்பால் எனக்கு இன்பமானதை கூறாமல், நீ கண்ட உண்மையை மொழிக!
இறையனார் என்பது இங்கு சிவபெருமானை குறிக்கும். சென்பக பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை நீக்கும் பொருட்டு சிவபெருமன் பாடியது.
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.
பூக்களில் உள்ள தேனை உண்டு வாழும் அழகிய சிறகுகளை உடைய வண்டே!! பழகுவதற்கு இனிமையும், மயிலை போன்ற அழகும், செறிவான அழகிய பற்களும் உடைய என் காதலியின் கூந்தலை விடவும் மணமுள்ள பூ ஏதேனும் நீ அறிவாயா!! என் மீது உள்ள அன்பால் எனக்கு இன்பமானதை கூறாமல், நீ கண்ட உண்மையை மொழிக!
இறையனார் என்பது இங்கு சிவபெருமானை குறிக்கும். சென்பக பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை நீக்கும் பொருட்டு சிவபெருமன் பாடியது.
Tuesday, May 25, 2010
பெரியோர் சிறியோர்!
"யாதும் ஊரே !யாவரும் கேளிர் ! " இவை கணியன் பூங்குன்றனார்ப் பாடிய உலகப் புகழ்ப் பெற்ற வரிகள். தமிழ் கற்றோர் அனைவரும் அறிந்திருக்ககுடிய வரிகள். ஆனால் இவ்வரிகளக்கு பின்னால் வரும் ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகளை Airtel Super Singer Junior -2விலும், மானாட மயிலாடவிலும், திருமதி செல்வத்திலும், இராணி ஆறு இராஜ யாருவிலும் மூழ்கித் திளைக்கும் சாமாண்ய தமிழன் அறிந்திருக்க நியாயமில்லை. இந்த சாமாண்ய தமிழனில் மெத்த படித்தவர்கள், அரசியல் தலைவன், தொண்டன், மாவட்டச் செயளாளர், அரசு அதிகாரிகள், கூலித்தொழிலாளி,விவசாயி, மாலுமி, கணிப்பொறிக்காரன், வணிகன் என அனைவரும் அடங்குவர். கூப்பிடும் துரத்தில் இன சுத்திகரிப்பு நிகழ்ந்துகொண்டிருக்க தாய்தமிழக குடிமகன் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இலவச வண்ணத் தொலைகாட்சி பெட்டியை வசப்படுத்துவதிலும், கண்டு களிப்பதிலும் செலவிட்டான். தமிழன் தன் உரிமைகள் மறுக்கப்பட்டு, காலம் காலமாக வேறூன்றி நின்ற மண்ணைவிட்டு விரட்டப்பட்டு, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் புகலிடம் கோரி நிற்பான் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் ஆறிந்ததனால் "எல்லா நாடுகளையும் சொந்த நாடாக கருது, அனைவரையும் உறவினராக எண்ணு" என்று பாடியதாக எண்ண தோன்றுகிறது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டு நவ யுவன்களுக்கும் யுவதிகளுக்கும் "தமிழர்கள் தமிழ்நாட்டில் இல்லாமல் ஏன் இலங்கைக்கு சென்றார்கள்?" என்று கேட்கும் அளவிற்கே பொது அறிவும் தமிழர் பிரச்சனைப் பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பவர்களே இவ்வாரிருக்க, பிறமாநிலத்தவரும், பிறமொழி பேசுபவர்களும், சர்வதேச சமுதாயமும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்ற நினைபதில் எள்ளவும் நியாயமில்லை.
இனி இப்பாடலை பார்ப்போம்,
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றன்
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நம் நாடே.உலகில் உள்ள அனைவரும் நமக்கு உறவினரே. நமக்கு தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. துன்பத்தற்கான காரணமும் தீர்வும் நமுள்ளேயே இருக்கிறது. இறத்தல் என்பது இயற்கை, அதில் புதுமை ஏதும் இல்லை. வாழ்வது இனிமையானது என மகிழ்வதும் இல்லை. இடிமின்னலோடு வானத்திலிருந்து விழுகின்ற மழைதுளி ஒன்றுடனொன்று இனைந்து சிற்றோடையாகி, பின்பு ஓடைகள் இனைந்து பாறைகளில் மோதிப் பேரிறைசலுடன் ஓடுகின்ற ஆற்றில் உள்ள ஓடம் நீரோட்டத்தின் வழியாக செல்வது போல் நம் உயிர் ஊழ்வினை வழியாக செல்லும் என்பதை ஞானத்தில்க் கண்டோம். ஆதலால் பெரியோரை வியந்து புகழ்வதும் இல்லை,சிறியோரை இகழ்தலும் இல்லை.
இனி இப்பாடலை பார்ப்போம்,
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றன்
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நம் நாடே.உலகில் உள்ள அனைவரும் நமக்கு உறவினரே. நமக்கு தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. துன்பத்தற்கான காரணமும் தீர்வும் நமுள்ளேயே இருக்கிறது. இறத்தல் என்பது இயற்கை, அதில் புதுமை ஏதும் இல்லை. வாழ்வது இனிமையானது என மகிழ்வதும் இல்லை. இடிமின்னலோடு வானத்திலிருந்து விழுகின்ற மழைதுளி ஒன்றுடனொன்று இனைந்து சிற்றோடையாகி, பின்பு ஓடைகள் இனைந்து பாறைகளில் மோதிப் பேரிறைசலுடன் ஓடுகின்ற ஆற்றில் உள்ள ஓடம் நீரோட்டத்தின் வழியாக செல்வது போல் நம் உயிர் ஊழ்வினை வழியாக செல்லும் என்பதை ஞானத்தில்க் கண்டோம். ஆதலால் பெரியோரை வியந்து புகழ்வதும் இல்லை,சிறியோரை இகழ்தலும் இல்லை.
Wednesday, May 19, 2010
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை !!
பண்டை தமிழர்களின் இல்வாழ்வை பற்றி நாம் அறிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவுவது அகப்பொருள் நுால்கள். அகப்பொருள் நுால்கள் தமிழில் பல இருப்பினும் 'அகம்' என்றே பெயர் அமைந்த பழந்தமிழ் நுால் அகநானூறு மட்டுமேயாகும். கணவன் மனைவி இடையிலான உறவை பற்றியும், ஆற்று மணலிலும், ஏரிக் கரைகளிலும், மாந்தோப்புகளிலும் வளர்ந்த தலைவன் தலைவி இடையிலான காதலை பற்றியும், நாம் கற்பனை செய்ய முடியாத உவமைகளுடனும், இலக்கிய செரிவுடனும் சுவைபட வழங்குகிறது அகநானூறு.
இன்று நாம் மணிமிடை பவளத்தில் உள்ள முல்லை திணை பாடல் ஒன்றை காண்போம்.
"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப்
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
- மதுரை மள்ளனார்.
'எண்ணையில் நனைத்து போன்ற பிசுபிசுப்பான தோலும், கரிய சிறகுகளும் உடைய வௌவால், பகலில் உறைவிடமாக கொண்ட உயர்ந்த கிளைகளையுடைய மரத்தை மாலை நேரங்களில் பிறிந்து சென்றுவிடும். அதுபோல மொட்டவிழ்ந்த ஒளிபொருந்திய முல்லை பூவும் வண்டினத்தை தன்னைவிட்டு பிரிந்து செல்லாது தடுத்துக் கொண்டிருக்கும் இந்த குளிர்ச்சி பொருந்திய மாலை நேரத்தில் அவர் என்னை பிரிந்து சென்று என்னை துயர் கொள்ள செய்துவிட்டார். அவர் வந்தாலும் வராவிட்டாலும் இனிய முகத்துடன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்!.. தோழி!' என்று நிலவினும் குளிர்ச்சி பொருந்திய தன் கண்கள் சிவக்கும்படி புலம்பினாள் என்று பாணன் வந்து தூது சொன்னான். தேர்ப்பாகனே ! நாம் கருதி வந்த வினை முடியவில்லை. ஆயினும் நீ புல்லை நிரம்பத்தின்ற குதிரையை விரைவாக தேரினில் பூட்டி இல்லம் நோக்கி செலுத்துக.
இன்று நாம் மணிமிடை பவளத்தில் உள்ள முல்லை திணை பாடல் ஒன்றை காண்போம்.
"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை
பகலுறை முதுமரம் புலம்பப் போகி,
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும் தண்பதக் காலை
வரினும், வாரார் ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?" எனத்தன்
பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப,
'அருந்துயர் உடையள் அவள்' என விரும்பிப்
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல்லார் புரவி, வல்விரைந்து, பூட்டி,
நெடுந்தேர் ஊர்மதி, வலவ!-
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
- மதுரை மள்ளனார்.
'எண்ணையில் நனைத்து போன்ற பிசுபிசுப்பான தோலும், கரிய சிறகுகளும் உடைய வௌவால், பகலில் உறைவிடமாக கொண்ட உயர்ந்த கிளைகளையுடைய மரத்தை மாலை நேரங்களில் பிறிந்து சென்றுவிடும். அதுபோல மொட்டவிழ்ந்த ஒளிபொருந்திய முல்லை பூவும் வண்டினத்தை தன்னைவிட்டு பிரிந்து செல்லாது தடுத்துக் கொண்டிருக்கும் இந்த குளிர்ச்சி பொருந்திய மாலை நேரத்தில் அவர் என்னை பிரிந்து சென்று என்னை துயர் கொள்ள செய்துவிட்டார். அவர் வந்தாலும் வராவிட்டாலும் இனிய முகத்துடன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்!.. தோழி!' என்று நிலவினும் குளிர்ச்சி பொருந்திய தன் கண்கள் சிவக்கும்படி புலம்பினாள் என்று பாணன் வந்து தூது சொன்னான். தேர்ப்பாகனே ! நாம் கருதி வந்த வினை முடியவில்லை. ஆயினும் நீ புல்லை நிரம்பத்தின்ற குதிரையை விரைவாக தேரினில் பூட்டி இல்லம் நோக்கி செலுத்துக.
Tuesday, May 18, 2010
யாயும் ஞாயும் யாரா கியரோ -செம்புலப் பெயனீரார்.
கிழ்கண்ட பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையை சேர்ந்தது.
ஆசிரியர் செம்புலப் பெயனீரார்.
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் காதல் கொள்கின்றனர். அப்பொழுது தலைவன் தலைவியை நோக்கி பாடுகிறான்,
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.
"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".
Subscribe to:
Posts (Atom)