கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.
பூக்களில் உள்ள தேனை உண்டு வாழும் அழகிய சிறகுகளை உடைய வண்டே!! பழகுவதற்கு இனிமையும், மயிலை போன்ற அழகும், செறிவான அழகிய பற்களும் உடைய என் காதலியின் கூந்தலை விடவும் மணமுள்ள பூ ஏதேனும் நீ அறிவாயா!! என் மீது உள்ள அன்பால் எனக்கு இன்பமானதை கூறாமல், நீ கண்ட உண்மையை மொழிக!
இறையனார் என்பது இங்கு சிவபெருமானை குறிக்கும். சென்பக பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை நீக்கும் பொருட்டு சிவபெருமன் பாடியது.
Thursday, June 10, 2010
Subscribe to:
Posts (Atom)